by admin on | 2025-11-25 07:21 PM
திக்... திக்... 2 மணி நேரம்! - கொலை வழக்கில் அதிவேக வேட்டை! காவல்துறைக்கு 'DIG' பாராட்டு!
தஞ்சாவூர்:நவ,25- கும்பகோணம் பகுதி கொலை வழக்கில் குற்றவாளி யார்?இந்தக் கேள்வி எழுந்த சில மணி நேரங்களிலேயே, கும்பகோணம் காவல்துறையினர் அதை முடிவுக்குக் கொண்டு வந்தனர்!ஒரு தீவிரமான கொலைக் குற்றம் நடந்த நிலையில், குற்றவாளியைக் கண்டுபிடிக்க மணிநேரங்கள் அல்ல, நாட்கள்கூட தேவைப்படும் சூழலில், கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார், சுவாமிமலை காவல் ஆய்வாளர் ஜெயமோகன், மற்றும் துணையாகச் செயல்பட்ட காவலர்கள் உதய் சிங், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை, விசாரணையைத் தொடங்கி, வெறும் இரண்டு மணி நேரத்துக்குள் குற்றவாளியைச் சுற்றி வளைத்து, கைது செய்துள்ளது.மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், இந்த மின்னல் வேகச் செயல்பாட்டைக் கெளரவிக்கும் விதமாக, தஞ்சை சரக DIG ஜியாவுல் ஹக் அவர்கள் நேரில் பாராட்டுகளைத் தெரிவித்து, காவல் அதிகாரிகளுக்கு சிறப்புச் சான்றிதழ்களை வழங்கினார்.
சட்டத்தை நிலைநாட்டுவதில் காவல்துறை காட்டிய இந்த வேகம், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிருபர் அ, மகேஷ்.
T. Muthu kamatchi evidence editor. 9842337244
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!