by aadhavan on | 2025-11-23 09:42 PM
» மு. ஆதவன்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 89வது நினைவு ”தியாகத் திருநாள்”, இங்கிலாந்து மண்ணில் இலண்டன் மாநகரின் ஈஸ்ட்ஹாம் பகுத்தியில் உள்ள டிரினிட்டி உள்அரங்கில் நடைபெற்றது.
அவரது திருவுருவ படத்திற்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள், மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள், இங்கிலாந்து வாழ் தமிழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலிருந்து வந்த பார்கவுன்சில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்மன் அமல்ராஜ், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முருகேசன், ராஜ்குமார், குணா உள்ளிட்டோர் சீரும் சிறப்புமாக நடத்தினர். நிகழ்வை வளர்மதி தொகுத்து வழங்கினார். கலைச்செல்வி விருந்தினரை உபசரித்தார். வழக்கறிஞர் பிரதாப் நன்றியுரை வழங்கினார்.
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு