| | | | | | | | | | | | | | | | | | |
உலகம் உலகம்

COP30 உச்சிமாநாட்டில் திடீர் தீ விபத்து...! திகைத்து போன அதிகாரிகள்...!

by Vignesh Perumal on | 2025-11-21 11:21 AM

Share:


COP30 உச்சிமாநாட்டில் திடீர் தீ விபத்து...! திகைத்து போன அதிகாரிகள்...!

பிரேசிலில் உள்ள பெலெம் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாட்டின் (COP30) அரங்குகளில் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அரங்கில் இருந்த பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா. ஊழியர்கள் அவசரமாக வெளியேறினர். இந்தச் சம்பவம் புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் காலநிலை நிதி தொடர்பான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைத்தது.

COP30 மாநாடு நடைபெற்று வரும் பிரேசிலின் பெலெம் நகரில் உள்ள மாநாட்டு மையத்தின் ஒரு அரங்கிற்குள் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தின் காரணமாக அந்த அரங்கம் முழுவதும் அடர்த்தியான புகை மண்டலம் நிரம்பியது. மாநாட்டில் பங்கேற்றிருந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் மற்றும் தூதுவர்கள் பீதியுடன் அந்த அரங்கிலிருந்து அவசர அவசரமாக வெளியேறினர்.

மாநாட்டின் இறுதி நாள்கள் நெருங்கும் நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாடு மற்றும் வளர்ந்த நாடுகளின் காலநிலை நிதி பங்களிப்பு ஆகியவை குறித்த மிக முக்கியமான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் இந்தச் சம்பவத்தால் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன.

தீ விபத்து ஏற்பட்டவுடன், மாநாட்டிற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாகவே, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்கள் மற்றும் மாநாட்டுப் பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டனர்.


அவர்கள், கையிருப்பில் இருந்த தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

அவர்களின் விரைவான நடவடிக்கைக்குப் பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நிலைமையை முழுவதுமாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பாராத விபத்து, ஏற்கனவே நிலவி வந்த இறுக்கமான பேச்சுவார்த்தைச் சூழலை மேலும் பதற்றமடையச் செய்தது.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment