by Vignesh Perumal on | 2025-11-20 03:34 PM
இந்தியாவின் தென்கோடி முனையாகவும், உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில், பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) டாக்டர் ஆர். ஸ்டாலின் IPS அவர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று நேரில் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களைக் காண தினமும் ஏராளமான பக்தர்களும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.
இப்பகுதிகளில் நிலவும் கூட்ட நெரிசல், கடலில் குளிக்கும்போது ஏற்படும் விபத்துகள் மற்றும் பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பது தொடர்பான விஷயங்களில் எஸ்.பி. ஸ்டாலின் அவர்கள் தனி கவனம் செலுத்தி ஆய்வில் ஈடுபட்டார்.
இப்பகுதியில் பணியில் இருக்கும் கடல்சார் பாதுகாப்புப் படையினர், கடற்கரைக் காவலர்கள், ரோந்துப் பணியில் உள்ள காவலர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும், பாதுகாப்பு நடைமுறைகள், அவசரக்கால மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
எஸ்.பி. டாக்டர் ஆர். ஸ்டாலின் அவர்களின் இந்த ஆய்வுப் பணியின்போது, கன்னியாகுமரி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர் அருண் ஆகியோர் உடனிருந்து, கள நிலவரங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் எஸ்.பி. நேரில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வது, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்கு மாவட்ட காவல்துறை அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி வருகை..! எதுக்கு தெரியுமா...?
திமுகவின் அதிரடி நடவடிக்கை...! கொண்டாடும் தொண்டர்கள்...! 26 வயதில் வேட்பாளர்...!
3 பேர் கைது...! 2 பைக் பறிமுதல்...! ஒரு ஆட்டோ பறிமுதல்....! அச்சத்தில் வியாபாரிகள்...! மக்கள் வரவேற்பு...!
கோவை வடக்கு தொகுதி - பா ஜ க வில் மல்லுக்கட்டு ! அண்ணனா ? அக்காவா ?
தேர்தல் அதிரடி...! கலெக்டரின் செயல்...! ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்...!