by Vignesh Perumal on | 2025-11-19 05:36 PM
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய அரசு இயற்கை விவசாயத்திற்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, மாநாட்டையும் புறக்கணித்தனர்.
இயற்கை விவசாயத்திற்கு முற்றிலும் எதிரான மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகளை மத்திய அரசு இறக்குமதி செய்ய அல்லது அறிமுகம் செய்ய முயல்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். பிரதமர் இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்கத் தார்மீக உரிமை இல்லை என்று விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகள், பாரம்பரிய ரகங்களை அழித்து, விவசாயிகளின் செலவை அதிகமாக்கி, ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
பிரதமரின் வருகையை எதிர்த்துக் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய கூட்டமைப்பினர் காவல்துறையினரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையால் கோவை நகரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகளின் இந்த எதிர்ப்பு, மத்திய அரசின் வேளாண் கொள்கைகள் மீது உள்ள அதிருப்தியையும், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்த கடுமையான கவலையையும் பிரதிபலிப்பதாக உள்ளது.
ஆசிரியர்கள் குழு......
ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி வருகை..! எதுக்கு தெரியுமா...?
திமுகவின் அதிரடி நடவடிக்கை...! கொண்டாடும் தொண்டர்கள்...! 26 வயதில் வேட்பாளர்...!
3 பேர் கைது...! 2 பைக் பறிமுதல்...! ஒரு ஆட்டோ பறிமுதல்....! அச்சத்தில் வியாபாரிகள்...! மக்கள் வரவேற்பு...!
கோவை வடக்கு தொகுதி - பா ஜ க வில் மல்லுக்கட்டு ! அண்ணனா ? அக்காவா ?
தேர்தல் அதிரடி...! கலெக்டரின் செயல்...! ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்...!