| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

செம்பட்டியில் பரபரப்பு...! தற்கொலை மிரட்டல்..! விரைந்து சென்ற காவல்துறையினர்....!

by Vignesh Perumal on | 2025-11-18 02:59 PM

Share:


செம்பட்டியில் பரபரப்பு...! தற்கொலை மிரட்டல்..! விரைந்து சென்ற காவல்துறையினர்....!

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த ஜெ.புதுக்கோட்டையில், அரசால் கட்டப்பட்டு வரும் மினி ஸ்டேடியத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயர் அழுத்த மின்கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவரைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர்.

ஜெ.புதுக்கோட்டையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர். லோகநாதன் வசிக்கும் பகுதியில் அரசால் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மினி ஸ்டேடியம் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் இந்த நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவ்வழியாகச் செல்லும் உயர் அழுத்த மின் கோபுரத்தின் மீது ஏறிய லோகநாதன், மினி ஸ்டேடியம் கட்டுவதைத் தடுக்கவில்லை என்றால் அங்கேயே தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்தார்.

மின்கோபுரத்தில் ஒருவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுப்பதாகத் தகவல் அறிந்ததும், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சுபத்ரா மற்றும் ஆத்தூர் வட்டாட்சியர் (தாசில்தார்) முத்துமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

உயரமான மின்கோபுரத்தில் ஏறி இருந்த லோகநாதனுடன், அதிகாரிகள் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரது கோரிக்கைகள் குறித்து விசாரிப்பதாகவும், உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்றும் எடுத்துரைத்தனர். அதிகாரிகளின் சமாதானப் பேச்சுக்குப் பிறகு, லோகநாதன் தனது போராட்டத்தைக் கைவிட்டுப் பாதுகாப்பாகக் கீழே இறங்கி வந்தார்.

காவல்துறையினர் லோகநாதனை அங்கிருந்து அழைத்துச் சென்று, அவரது மிரட்டலுக்கான காரணங்கள் மற்றும் மினி ஸ்டேடியம் தொடர்பான பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment