by Vignesh Perumal on | 2025-11-17 12:47 PM
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்ற சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று (நவம்பர் 17, 2025) காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனம் சார்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளர்களுக்கு மீண்டும் உடனடியாகப் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தொழிலாளர் தரப்பினர் போராடி வருகின்றனர். இந்தப் பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டுத் தீர்வுகாணக் கோரி, சாம்சங் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேரணியாக வந்த தொழிலாளர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறிச் செல்ல முயன்ற தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகளைப் போலீசார் கைது செய்தனர்.
மாநிலச் செயலாளர் முத்துக்குமார் உட்பட மொத்தம் 70 பேர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிர்வாகம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி வருகை..! எதுக்கு தெரியுமா...?
திமுகவின் அதிரடி நடவடிக்கை...! கொண்டாடும் தொண்டர்கள்...! 26 வயதில் வேட்பாளர்...!
3 பேர் கைது...! 2 பைக் பறிமுதல்...! ஒரு ஆட்டோ பறிமுதல்....! அச்சத்தில் வியாபாரிகள்...! மக்கள் வரவேற்பு...!
கோவை வடக்கு தொகுதி - பா ஜ க வில் மல்லுக்கட்டு ! அண்ணனா ? அக்காவா ?
தேர்தல் அதிரடி...! கலெக்டரின் செயல்...! ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்...!