by Vignesh Perumal on | 2025-09-27 06:13 PM
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே அருப்பம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா (55) என்பவர் காணாமல் போன வழக்கில், இன்று அவரது மனைவி தனலட்சுமி (39) காவல் நிலையத்தில் சரணடைந்து, தான் கணவரைக் கொலை செய்து எரித்துவிட்டதாக வாக்குமூலம் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருப்பம்பட்டியைச் சேர்ந்த சுப்பையாவின் மனைவி தனலட்சுமி, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, தனது கணவரைக் காணவில்லை என்று எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பையாவைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 26, 2025) தனலட்சுமி திடீரென எரியோடு காவல் நிலையம் வந்து, தனது கணவர் சுப்பையாவைத் தானே அடித்துக் கொலை செய்ததாகவும், பின்னர் உடலை எரித்துவிட்டதாகவும் கூறிச் சரணடைந்தார்.
இந்தத் திடீர் வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொலைக்கான காரணம் மற்றும் கொலைக்கு உடந்தையாக வேறு யாராவது இருந்தார்களா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனலட்சுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் அவரது ஆண் நண்பர் ஒருவரை எரியோடு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நல்லமானார்கோட்டை மற்றும் எரியோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!
பிப்ரவரி 12-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...! எதுக்கு தெரியுமா...?
பிப்ரவரி 17-ல் அமைச்சர் அறிவிப்பு...! சபாநாயகர் அப்பாவு தகவல்...!