by Vignesh Perumal on | 2025-09-26 02:24 PM
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தூய்மைப் பணியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரியகுளம் நகராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களாக பெத்தானசாமி மற்றும் குப்பை சேகரிப்பு வாகன ஓட்டுநர் வைரவன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், வடகரை பள்ளிவாசல் பின்புறம் உள்ள பகுதிகளில் நகரின் தூய்மைப் பணியை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சல்மான் பாரிஸ் என்பவர், அவர்களைத் தூய்மைப் பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்துள்ளார். அத்துடன், அவர்களை மிகவும் அசிங்கமாகப் பேசியதோடு, பெத்தானசாமி மற்றும் வைரவன் ஆகிய இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும், தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் முகப்புப் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் மற்றும் பெரியகுளம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அசன் முகமது ஆகியோர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாக்குதல் நடத்திய நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் சுகாதார ஆய்வாளர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தூய்மைப் பணியாளர்களைத் தாக்கிய இந்தச் சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!
பிப்ரவரி 12-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...! எதுக்கு தெரியுமா...?
பிப்ரவரி 17-ல் அமைச்சர் அறிவிப்பு...! சபாநாயகர் அப்பாவு தகவல்...!