by Vignesh Perumal on | 2025-09-25 08:56 PM
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய உண்டியல்கள் இரண்டு நாட்கள் எண்ணப்பட்டன. இதில், மொத்த வருவாயாக ₹4 கோடியே 16 லட்சத்து 34 ஆயிரத்து 199 ரொக்கப் பணம் கிடைத்துள்ளது.
பழனி கோயிலில் பக்தர்கள் அதிக அளவில் காணிக்கை செலுத்தி வருவது வழக்கம். இந்த முறை உண்டியல் எண்ணப்பட்டபோது, பின்வரும் பொருட்கள் காணிக்கையாகக் கிடைத்தன. அதாவது ரொக்கப் பணம் ₹4,16,34,199, தங்கம் 890 கிராம், வெள்ளி 12,275 கிராம், வெளிநாட்டு கரன்சி 1485 இவை தவிர, பக்தர்கள் பித்தளை வேல், கைக்கடிகாரங்கள், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டு ஆடைகள் போன்ற பொருட்களையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.
கோயிலின் நிர்வாகம், பக்தர்களின் காணிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் எண்ணி, அதன் விவரங்களை அறிவித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!