by Vignesh Perumal on | 2025-09-25 03:50 PM
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கௌதமன் தலைமையிலான காவல்துறையினர், உதவி காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல்லாவுடன் அப்பகுதியில் இன்று (செப்டம்பர் 25, 2025) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வத்தலகுண்டு நவீன் பேக்கரி அருகே, ஒருவர் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த சிவானந்தபெருமாள் (29) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
காவல்துறையினர், சிவானந்தபெருமாள் மீது வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் குழு.....
தேனியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!