by Vignesh Perumal on | 2025-09-23 05:26 PM
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) குறைப்பு இன்று (செப்டம்பர் 23, 2025) முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆவின் நிறுவனம் தனது பால் பொருட்கள் சிலவற்றின் விலையைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை குறைப்பு, பொதுமக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலை குறைப்பு விவரங்களில் கூறப்பட்டுள்ளதாவது: 200 கிராம் பன்னீர் ₹120-லிருந்து ₹110 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 500 கிராம் பன்னீர் ₹300-லிருந்து ₹275 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய்யின் விலை ₹690-லிருந்து ₹650 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதன் பலனை நேரடியாகப் பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஆவின் பொருட்களின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் குழு.....
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!