by Vignesh Perumal on | 2025-09-21 02:56 PM
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அடுத்த கொட்டாரப்பட்டி பிரிவு அருகேயுள்ள ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து, 50 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்தூர் கருப்பதேவனூரைச் சேர்ந்த பேபி (50) என்ற பெண், இன்று (செப்டம்பர் 21, 2025) கொட்டாரப்பட்டி பிரிவு அருகேயுள்ள ஒரு தனியார் தோட்டத்திற்கு வந்துள்ளார். திடீரென, அங்கிருந்த ஒரு கிணற்றில் அவர் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் மிதந்த பேபியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேபியின் தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் குழு.....
தேனியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!