by Vignesh Perumal on | 2025-09-21 02:56 PM
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அடுத்த கொட்டாரப்பட்டி பிரிவு அருகேயுள்ள ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து, 50 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்தூர் கருப்பதேவனூரைச் சேர்ந்த பேபி (50) என்ற பெண், இன்று (செப்டம்பர் 21, 2025) கொட்டாரப்பட்டி பிரிவு அருகேயுள்ள ஒரு தனியார் தோட்டத்திற்கு வந்துள்ளார். திடீரென, அங்கிருந்த ஒரு கிணற்றில் அவர் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் மிதந்த பேபியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேபியின் தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் குழு.....
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!