by admin on | 2025-09-21 12:35 PM
*பழனியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது*
திண்டுக்கல் மாவட்டம், பழநி பெரியப்பா நகர் குப்பை கிடங்கு அருகே நவநீதன்(25) என்பவரை கடந்த மாதம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அஜித்குமார் (எ) அங்கமுத்து(32), சுதாகர்(33), ஆதித்யா(27), ராகுல்தேவ்(34) ஆகிய 4 பேரை பழனி DSP.தனஞ்செயன் மேற்பார்வையில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த 4 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட S.P.பிரதீப் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சரவணன் குண்டர் சட்டத்தின் கீழ் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மோகன் கணேஷ் திண்டுக்கல்.
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!
பிப்ரவரி 12-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...! எதுக்கு தெரியுமா...?
பிப்ரவரி 17-ல் அமைச்சர் அறிவிப்பு...! சபாநாயகர் அப்பாவு தகவல்...!