| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பழனியில் நான்கு பேர் மீது குண்டாஸ்..!! போலீசார் அதிரடி..!!

by admin on | 2025-09-21 12:35 PM

Share:


பழனியில் நான்கு பேர் மீது குண்டாஸ்..!! போலீசார் அதிரடி..!!

*பழனியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது*


திண்டுக்கல் மாவட்டம், பழநி பெரியப்பா நகர் குப்பை கிடங்கு அருகே நவநீதன்(25) என்பவரை கடந்த மாதம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அஜித்குமார் (எ) அங்கமுத்து(32), சுதாகர்(33), ஆதித்யா(27), ராகுல்தேவ்(34) ஆகிய 4 பேரை பழனி DSP.தனஞ்செயன் மேற்பார்வையில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் இந்த 4 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட S.P.பிரதீப் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சரவணன் குண்டர் சட்டத்தின் கீழ் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment