by Vignesh Perumal on | 2025-09-20 04:56 PM
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு, பழனியில் இருந்து வெங்காயம் விற்கச் சென்ற வியாபாரிகளுக்கும், கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள ஒரு சாக்லேட் கடைக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பழனியில் இருந்து வெங்காயம் விற்கச் சென்ற வியாபாரிகள், கொடைக்கானலில் பெருமாள்மலை பகுதியில் உள்ள ஒரு சாக்லேட் கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது, கடைக்காரர்களுக்கும் வெங்காய வியாபாரிகளுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.
கைகலப்பில், வெங்காய வியாபாரிகளும், கடைக்காரர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கி, கடையில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளதால், கொடைக்கானலில் இது ஒரு முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது. மேலும், இந்த மோதலுக்கான சரியான காரணம் குறித்துத் துல்லியமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
செய்தி - பாலாஜி கதிரேசன் பழனி-திண்டுக்கல்.
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!