| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

கொடைக்கானலில் மோதல்...! இரு வியாபாரிகள் இடையே கைகலப்பு...!

by Vignesh Perumal on | 2025-09-20 04:56 PM

Share:


கொடைக்கானலில் மோதல்...! இரு வியாபாரிகள் இடையே கைகலப்பு...!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு, பழனியில் இருந்து வெங்காயம் விற்கச் சென்ற வியாபாரிகளுக்கும், கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள ஒரு சாக்லேட் கடைக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பழனியில் இருந்து வெங்காயம் விற்கச் சென்ற வியாபாரிகள், கொடைக்கானலில் பெருமாள்மலை பகுதியில் உள்ள ஒரு சாக்லேட் கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது, கடைக்காரர்களுக்கும் வெங்காய வியாபாரிகளுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.

கைகலப்பில், வெங்காய வியாபாரிகளும், கடைக்காரர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கி, கடையில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளதால், கொடைக்கானலில் இது ஒரு முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது. மேலும், இந்த மோதலுக்கான சரியான காரணம் குறித்துத் துல்லியமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.


செய்தி - பாலாஜி கதிரேசன் பழனி-திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment