| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

சபரிமலைக்கு, ஒரு மாஸ்டர் பிளான் இருக்கு...! முதல்வர் பினராயி விஜயன் பேச்சு...!

by Vignesh Perumal on | 2025-09-20 04:41 PM

Share:


சபரிமலைக்கு, ஒரு மாஸ்டர் பிளான் இருக்கு...!  முதல்வர் பினராயி விஜயன் பேச்சு...!

"சபரிமலை என்பது சாதி, மதங்களை கடந்து மனிதநேயத்துடன் மக்கள் ஒன்றுகூடும் ஒரு புனிதத் தலம். ஐயப்பனை மக்கள் எளிமையாக வழிபட வைப்பதே மாநாட்டின் நோக்கம்" என்று உலக ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.

சபரிமலை வளர்ச்சிக்காக ஒரு மாஸ்டர் பிளான் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகப் புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில், சபரிமலையை ஒரு உலகத் தரம் வாய்ந்த ஆன்மிகத் தலமாக மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஐயப்பன் கோயில் வருமானம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.


நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment