| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

10 ஆண்டுகள் தலை மறைவு குற்றவாளி கைது...!!!

by admin on | 2025-09-19 08:27 PM

Share:


10 ஆண்டுகள் தலை மறைவு குற்றவாளி கைது...!!!

திண்டுக்கல்லில் விபச்சார வழக்கில் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது.

திண்டுக்கல் அருகே கடந்த 2015-ம் ஆண்டு விபச்சார வழக்கில் திண்டுக்கல் ஏர்போர்ட் நகரை சேர்ந்த கமலக்கண்ணன் மனைவி செல்வி(42) என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து செல்வி நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியனை பிறப்பித்தது.இது தொடர்பாக புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ், பெண் காவலர்கள் மணிமாலா, முனீஸ்வரி உள்ளிட்டோர் தீவிர விசாரணை மேற்கொண்டு செல்வியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினார்


செய்தியாளர் மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment