by Vignesh Perumal on | 2025-09-19 11:38 AM
திண்டுக்கல் தெற்கு ரத வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருவதால், சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் தொற்றுநோய் அபாயம் அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் இன்று (செப்டம்பர் 19, 2025) சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் தெற்கு ரத வீதி, காய்கறி மார்க்கெட், மக்கள் அதிகம் கூடும் ஒரு பகுதி. இந்தப் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் வெளியேறிச் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.
மேலும், இந்த தேங்கிய கழிவுநீரால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, டைபாய்டு போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது, உடனடியாக பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி, அப்பகுதியைச் சுத்தம் செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்துப் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
ஆசிரியர்கள் குழு.....
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!