| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

முன்னாள் அமைச்சர்...! ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சந்திப்பு...! புதிய சர்ச்சை...!

by Vignesh Perumal on | 2025-09-18 02:52 PM

Share:


முன்னாள் அமைச்சர்...! ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சந்திப்பு...! புதிய சர்ச்சை...!

திண்டுக்கல்லைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அ.தி.மு.க-வில் இருந்து விலகியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியது, அ.தி.மு.க. வட்டாரத்தில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவருக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் பலர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியதாகத் தகவல்கள் வெளியாகின. அதன் பிறகு, அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவரது செயல்பாடுகள் அ.தி.மு.க. தலைமையை கவலையடையச் செய்துள்ளது.

இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 18, 2025) திண்டுக்கல்லைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் இல்லத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் செங்கோட்டையனைச் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின் நோக்கம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்வது குறித்தும், எதிர்காலத்தில் இருவரும் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மற்றும் செங்கோட்டையனை உள்ளடக்கிய தலைவர்களைப் பா.ஜ.க. தலைமை இணைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு அ.தி.மு.க.வில் ஒரு புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.



ஆசிரியர்கள் குழு......

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment