| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

நாட்டுத் துப்பாக்கியுடன் அதிரடி கைது...! வனத்துறையினர் தீவிர விசாரணை...!

by Vignesh Perumal on | 2025-09-01 01:24 PM

Share:


நாட்டுத் துப்பாக்கியுடன் அதிரடி கைது...! வனத்துறையினர் தீவிர விசாரணை...!

ஒசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரக எல்லைக்குட்பட்ட மாடக்கல் கிராமத்தில், மான் கொம்பு மற்றும் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனவிலங்குகளை வேட்டையாடுவது தொடர்பான ரகசியத் தகவல், ஜவளகிரி வனச்சரக அதிகாரிகளுக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில், வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர், மாடக்கல் கிராமப் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது, குபேந்திரன் (சூடப்பன் மகன்) என்பவரை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில், அவர் சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு மான் கொம்பு மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

வனத்துறையினர் குபேந்திரனை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மான் கொம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது, வேட்டையாடுவதற்கு வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகளை வேட்டையாடுவதைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.





ஆசிரியர்கள் குழு.....

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment