by Vignesh Perumal on | 2025-08-24 11:45 AM
கரூரில் பாலியல் தொழில் தொடர்பாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பாஜக உள்ளாட்சி குழு அமைப்பாளர் ரகுபதி உட்பட 3 பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்ட பாஜக உள்ளாட்சி குழு அமைப்பாளரான ரகுபதி, பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகத் தான்தோன்றிமலை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், போலீசார் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.
கண்காணிப்பின் முடிவில், பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் அதிரடியாக அங்குச் சென்று சோதனை நடத்தினர். சோதனையின்போது, பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த ரகுபதி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இந்தச் செயலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் கரூர் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு.....
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!