by Vignesh Perumal on | 2025-08-13 04:59 PM
ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றபோது, இந்திய ராணுவம் அந்த முயற்சியை முறியடித்தது. இந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (LOC) அருகே, எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் குழுவை இந்திய ராணுவம் கண்டறிந்தது. உடனடியாக ராணுவ வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தினர்.
இந்த கடுமையான சண்டையின்போது, ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். ராணுவத்தின் விரைவான நடவடிக்கையால், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதை கண்டறிய, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா..!! கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்....!!
உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்..!!
ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ் அதிரடி பேட்டி...!
அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!
விதி மீறும் வாகனங்கள் - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை !