by Vignesh Perumal on | 2025-08-12 02:38 PM
2018-ஆம் ஆண்டு, திருமணத்தை மீறிய உறவு காரணமாக தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில், குற்றவாளியான குன்றத்தூர் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அபிராமியின் மேல்முறையீட்டு மனுவுக்குப் பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ல், அபிராமி தனது இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் வைத்துக் கொலை செய்தார். இந்த வழக்கில், அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்திற்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தற்போது உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.
ஆண்டிப்பட்டி அரசியல் யுத்தம்...! அண்ணன் VS தம்பி..! ஆட்சி அதிகாரம் யாருக்கு...?
அதிமுகவிற்கு அதிர்ச்சி...! அதிருப்தியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.தமிழரசன்...! திமுகவில் ஐக்கியம்..!
பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரம் ! இருவர் அதிரடி கைது !!
பான் கார்டு - புதிய நடைமுறை ! புதிய மாற்றங்கள் - உஷார் !!
மதசார்பற்ற கூட்டணி ஆலோசனைக் கூட்டம்....!!!