by Vignesh Perumal on | 2025-08-12 02:38 PM
2018-ஆம் ஆண்டு, திருமணத்தை மீறிய உறவு காரணமாக தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில், குற்றவாளியான குன்றத்தூர் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அபிராமியின் மேல்முறையீட்டு மனுவுக்குப் பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ல், அபிராமி தனது இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் வைத்துக் கொலை செய்தார். இந்த வழக்கில், அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்திற்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தற்போது உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.
சசிகலா ஓபிஎஸ் குறித்து டிடிவி கருத்து....!!!!
போதைப் பொருள் தடுப்பு, எதிரிகள் பரிவர்த்தனை குறித்து காவல்துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டம்....!!!!
உயர்ரக கஞ்சா கடத்தல் - கேரளா இளைஞர்கள் 6 பேர் கைது !
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!