by Vignesh Perumal on | 2025-08-12 10:31 AM
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் வகையில், 'முதலமைச்சரின் தாயுமானவர்' என்ற புதிய திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்.
'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அவர்களது வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 16,73,333 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் வீட்டிற்கே சென்று வழங்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினார்.
இந்தத் திட்டம், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும் என்பதால், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
ஆண்டிப்பட்டி அரசியல் யுத்தம்...! அண்ணன் VS தம்பி..! ஆட்சி அதிகாரம் யாருக்கு...?
அதிமுகவிற்கு அதிர்ச்சி...! அதிருப்தியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.தமிழரசன்...! திமுகவில் ஐக்கியம்..!
பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரம் ! இருவர் அதிரடி கைது !!
பான் கார்டு - புதிய நடைமுறை ! புதிய மாற்றங்கள் - உஷார் !!
மதசார்பற்ற கூட்டணி ஆலோசனைக் கூட்டம்....!!!