by Vignesh Perumal on | 2025-08-07 11:28 AM
சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலைக் கொலை செய்த குற்றவாளியான மணிகண்டன், காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதில் உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சண்முகவேல், குற்றவாளிகளை விசாரிக்கச் சென்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை வழக்கில், மணிகண்டன், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவரது அண்ணன் தங்கபாண்டி ஆகிய மூவரும் தேடப்பட்டு வந்தனர். மூர்த்தி மற்றும் தங்கபாண்டி ஏற்கனவே சரணடைந்த நிலையில், மணிகண்டனைப் பிடிக்கக் காவல்துறை தனிப்படை அமைத்துத் தேடி வந்தது.
தனிப்படை போலீசார், மணிகண்டன் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவரைச் சுற்றி வளைத்தனர். அப்போது, மணிகண்டன் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார். அவரைப் பிடிக்க முயன்ற போலீஸ் அதிகாரி சரவணக்குமாரைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓட முயற்சி செய்தபோது, காவல்துறையினர் தற்காப்புக்காக அவரைச் சுட்டனர். இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த என்கவுன்ட்டர் சம்பவம், காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!