by Vignesh Perumal on | 2025-07-15 07:44 AM
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 மளிகைக் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், வசந்தன் மற்றும் சாணார்பட்டி போலீசார் ஆகியோர் இன்று (ஜூலை 15, 2025) சாணார்பட்டி பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வீரசின்னம்பட்டியில் உள்ள மளிகைக் கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின்போது, ஜெயலட்சுமி, ரோஜா பேகம் மற்றும் உமர் தின் ஆகியோருக்குச் சொந்தமான 3 மளிகைக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த 3 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும், சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பிற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!