| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் DMK

"ஓரணியில் தமிழ்நாடு"..! அமைச்சர் புதிய திட்டம் தீவிரம்..!

by Vignesh Perumal on | 2025-07-03 11:47 AM

Share:


"ஓரணியில் தமிழ்நாடு"..! அமைச்சர் புதிய திட்டம் தீவிரம்..!

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல், கோவிந்தாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு தன்னை உறுப்பினராகப் பதிவு செய்து, இத்திட்டத்தைத் துவக்கி வைத்தார். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அவரைத் தொடர்ந்து, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் அவர்களும் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினராகப் பதிவு செய்தார்.

இந்நிகழ்வில், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

"ஓரணியில் தமிழ்நாடு" திட்டம், திமுகவை மேலும் வலுப்படுத்துவதையும், அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஒற்றுமையையும், கழகத்தின் கொள்கைகளையும் வலுப்படுத்த இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகம் முழுவதும் திமுகவின் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை தீவிரப்படுத்தும் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது அடித்தளத்தை வலுப்படுத்தவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் இத்தகைய திட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.





செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment