by Vignesh Perumal on | 2025-07-02 04:06 PM
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் (திமுக) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) பக்க பலமாக இருக்கும் என அதன் பொதுச் செயலாளர் வைகோ உறுதிபடத் தெரிவித்துள்ளார். மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திராவிட இயக்கத்தின் வலிமையை வலியுறுத்திப் பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் வைகோ கூறியதாவது: "திமுகவிற்கும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் நாங்கள் பக்க பலமாக இருப்போம். மரியாதை நிமித்தமாகவே முதலமைச்சரை இன்று சந்தித்தேன். இந்துத்துவா சக்திகள், சனாதன சக்திகள் பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக) சேர்ந்து திராவிட இயக்கத்தை எப்படியாவது அழித்து விட நினைக்கிறார்கள். இமய மலையைக் கூட அசைத்து விடலாம். ஆனால், திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. திராவிட இயக்கம் என்பது தமிழ் மண்ணின் வேர்களில் ஆழமாகப் பதிந்த ஒரு இயக்கம். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். மக்கள் திமுகவின் தலைமையையும், முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சியையும் மீண்டும் அங்கீகரிப்பார்கள்."
வைகோவின் இந்த அறிக்கை, தமிழக அரசியலில் திமுக கூட்டணியின் ஒருமைப்பாட்டையும், திராவிட சித்தாந்தத்தின் முக்கியத்துவத்தையும் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் அதன் சித்தாந்தங்களுக்கு எதிராக திராவிட கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், வைகோவின் இந்த கருத்துக்கள் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வுகளின் ஒரு பகுதியாகவும் இது அமைகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!