by admin on | 2025-07-02 12:23 PM
தேனி மாவட்ட பிள்ளைமார் - முதலியார் நல அறக்கட்டளை சார்பாக
சின்னமனூரில் மதிப்பிற்குரிய ஐயா, வ.உ.சி. அவர்களின் திரு உருவச்சிலைக்கு மாலை, மரியாதை ஊர்வலமாக சென்று செய்யப்பட்டது.புதிய உறுப்பினர்கள் சேர்க்கை சின்னமனூர் வ. உ .சி. ஐ டி ஐ யில் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது,இவ்விழாவிற்கு தேனி மாவட்ட தலைவர் உயர்திரு எம் எஸ் எஸ் காந்தவாசன்,போடி ரவி பிள்ளை ,கனகராஜ், குமரவேல் ,சன்னாசி பிள்ளை,குமரேசன்,யோகா ராஜேந்திரன் யோகா ரவி ராம் மற்றும் சின்னமனூரை சேர்ந்த சங்கத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அற கட்டளையின்நோக்கங்களும் அதன் செயல்பாடுகளும் எடுத்து உரைக்கப்பட்டது.சமுதாயத்தில் நம் குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும் அதற்கு ஒரே வழி கல்வி என எடுத்துரைக்கப்பட்டது கல்வியின் நோக்கமும் அதனுடைய செயல்பாடுகளும் எடுத்துரைக்கப்பட்டது வரும் காலங்களில் நமது மாணவ, மாணவிகள் ஐஐடி ,ஜே இ ஈ ,மருத்துவம் போன்ற படிப்புகளில் எப்படி வெற்றி பெறுவது என கல்வியாளர் குழு அமைத்து அவர்களுக்கு தகுந்த முறையில் கலந்தாய்வு ,மற்றும் பயிற்சி அளிப்பது சம்பந்தமாக கல்வி குழு என ஒரு குழுவை அமைக்கலாம் என தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் சின்னமனூர் கண்ணன் அவர்கள் நன்றியுரை கூறினார்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர். மற்றும் மாவட்டத் தலைவர் தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம் தேனி. 9842337244
நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தித் .... திக்.... நொடிகள் - பரபரப்பு !
காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம் - சுணங்கும் நிர்வாகிகள் - காரணம் என்ன. ?
அனுமதியின்றி மதக் கல்வி - பள்ளியை மூட கோர்ட் உத்தரவு !
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !