| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்திரவதை - தற்கொலை செய்த இளம் பெண் ரிதன்யா - கோட்டாட்சியர் விசாரணை : :

by Satheesh on | 2025-07-01 06:01 PM

Share:


வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்திரவதை - தற்கொலை செய்த இளம் பெண் ரிதன்யா - கோட்டாட்சியர் விசாரணை  : :

திருப்பூர்: கணவர் குடும்​பத்​தினர் சித்​ர​வதை செய்​த​தாக வாட்​ஸ்​அப்​பில் தந்​தைக்கு ஆடியோ அனுப்​பி​விட்​டு, காரில் இளம்​பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்​பவம் தமிழகம் முழு​வதும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்ள நிலை​யில், அவரது கணவர், மாம​னார் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மேலும், இது தொடர்​பாக கோட்​டாட்​சி​யர் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறார்.  திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி கைகாட்​டிபுதூர் ஜெயம் கார்​டன் பகு​தி​யைச் சேர்ந்​தவர் கவின்​குமார். இவரது மனைவி ரிதன்யா (27). இவர்​களுக்கு கடந்த 3 மாதங்​களுக்கு முன் திரு​மணம் நடை​பெற்​றது. இந்​நிலை​யில், கடந்த 28-ம் தேதி மொண்​டி​பாளை​யம் அருகே காரில் விஷமருந்தி ரிதன்யா தற்​கொலை செய்து கொண்​டார். இறப்​ப​தற்கு முன்​பாக ரிதன்யா தனது தந்​தைக்கு அனுப்​பிய வாட்​ஸ்​அப் ஆடியோ பதி​வில், “நான் தற்​கொலை செய்து கொள்​வதற்கு காரணம் திருமண வாழ்க்​கை​தான். கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வரமூர்த்​தி, மாமி​யார் சித்​ராதேவி ஆகியோர்​தான் தற்​கொலைக்கு காரணம்” என்று தெரி​வித்​திருந்​தார். அவி​நாசி அரசு மருத்​து​மனை​யில் நேற்று முன்​தினம் ரிதன்​யா​வின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு வைக்​கப்​பட்ட நிலை​யில், அங்கு வந்த கவின்​கு​மார் மற்​றும் அவரது குடும்​பத்​தினரை ரிதன்​யா​வின் உறவினர்​கள் முற்​றுகை​யிட்​டு, தாக்க முயன்​றனர். அவர்​களை போலீ​ஸார் மீட்​டு, அங்​கிருந்து அனுப்பி​வைத்​தனர். இந்​நிலை​யில், ரிதன்​யாவை துன்​புறுத்​தி, தற்​கொலைக்கு தூண்​டிய​தாக சேவூர் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வரமூர்த்தி ஆகியோரைக் கைது செய்​தனர். நகை கேட்டு துன்புறுத்தல்... ரிதன்​யா​வின் தந்தை அண்​ணாதுரை கூறும்​போது, “பாரம்​பரியக் குடும்​பம் என நம்பி பெண்​ணைக் கொடுத்து ஏமாந்​து​விட்​டோம். திரு​மண​மான 15 நாளில் ரிதன்யா எங்​கள் வீட்​டுக்கு வந்து கண்​ணீர் விட்டு அழு​தார். உடல் ரீதி​யாக​வும், மன ரீதி​யாக​வும் அவரை மிக​வும் கொடுமைப்​படுத்தி உள்​ளனர். திரு​மணத்​தின்​போது கணக்​கின்றி நகை போட்​டும், இன்​னும் நகை கேட்டு துன்​புறுத்தி உள்​ளனர். வீட்​டுக்​குள் பூட்டி வைத்து சித்​ர​வதை செய்​துள்​ளனர். என் மகளுக்கு நிகழ்ந்​தது​போல இனி யாருக்​கும் நடக்​கக் கூடாது. ரிதன்யா இறப்​புக்கு உரிய நீதி கிடைக்க வேண்​டும்” என்​றார்.திரு​மண​மான 3 மாதத்​தில் ரிதன்யா தற்​கொலை செய்து கொண்​ட​தால், திருப்​பூர் கோட்​டாட்​சி​யர் மோக​னசுந்​தரம் இதுகுறித்து விசா​ரித்து வரு​கிறார். அவர் கூறும்​போது, “இளம்​பெண் ரிதன்யா மரணம் தொடர்​பாக பெண் வீட்​டார் தரப்​பிலும், போலீ​ஸார் தரப்​பிலும் இது​வரை விசா​ரிக்​கப்​பட்​டுள்​ளது. அடுத்​தகட்​ட​மாக, மாப்​பிள்ளை வீட்​டார் தரப்​பில் வி​சா​ரிக்​கப்​படும். வி​சா​ரணை அறிக்கை அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்​கு​மாறு அவி​நாசி காவல்​ துணை கண்​காணிப்​பாள​ருக்​கு அறி​வுறு​த்​தப்​படும்​” என்​றார்.

செய்தியாளர் : N.சதீஷ்குமார் , பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment