| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

3-வது நாளாக போக்குவரத்து தடை..! மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கம்...!

by Vignesh Perumal on | 2025-06-23 10:55 AM

Share:


3-வது நாளாக போக்குவரத்து தடை..! மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கம்...!

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து நிலையம் முன்புள்ள மேம்பாலத்தின் இணைப்பில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, மூன்றாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூரு செல்லும் திசையில் உள்ள பாலத்தில் இந்த இடைவெளி ஏற்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கு மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, ஓசூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் இரண்டு பாலங்களுக்கு இடையிலான இணைப்பில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல், பாலத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியதோடு, பெரும் விபத்து ஏற்படும் அபாயத்தையும் உருவாக்கியது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். பாலத்தின் இணைப்பு விலகியிருப்பதைக் கண்டறிந்த அதிகாரிகள், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூரு செல்லும் திசையில் உள்ள பாலத்தில் போக்குவரத்தை முழுமையாக தடை செய்தனர்.

கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ஓசூர் நகருக்குள் வழியாகச் சென்று பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடையுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு - கிருஷ்ணகிரி செல்லும் மூன்று வழிப்பாதையில், ஒரு வழித்தடம் பெங்களூரு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூரு செல்லும் மற்ற சிறிய வாகனங்கள் இந்த மாற்றுப் பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன.

பாலத்தில் ஏற்பட்ட இடைவெளியைச் சரிசெய்வதற்கான சீரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னரே பாலம் மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலத்தில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஓசூர் நகரின் முக்கிய சாலைகளிலும், மாற்றுப் பாதைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க, மாற்றுப்பாதைகள் குறித்த தகவல்களை அறிந்து பயணிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.





நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment