by Vignesh Perumal on | 2025-06-21 03:16 PM
நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த பிதர்காடு குடியிருப்புப் பகுதியில் தொடர்ந்து நடமாடி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தி வந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக, வனத்துறையினர் 'ஜம்போ' மற்றும் 'கிருஷ்ணா' எனப் பெயரிடப்பட்ட இரண்டு கும்கி யானைகளை களமிறக்கியுள்ளனர். காட்டு யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அதை வனப்பகுதிக்குள் விரட்ட விரிவான திட்டத்துடன் வனத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.
பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட நெலாக்கோட்டை, விலங்கூர், பாக்கனா, குந்தலாடி, புத்தூர் வயல், முக்கட்டி, பிதர்காடு போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள பஜார், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் காட்டு யானைகள் உலா வருவது, பொதுமக்களை விரட்டுவது, வாகனங்களைத் தாக்குவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. குறிப்பாக, ஒற்றைக் காட்டு யானை ஒன்று 35க்கும் மேற்பட்ட வீடுகளையும், விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருவதாக மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.
பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, காட்டு யானையின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து பயிற்சி பெற்ற ஜம்போ மற்றும் கிருஷ்ணா ஆகிய இரண்டு கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்தனர்.
வனத்துறையினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, இரவு பகலாக காட்டு யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். டிரோன் உதவியுடனும் யானையின் இருப்பிடம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கும்கி யானைகளின் உதவியுடன், காட்டு யானையை முழுமையாகக் கண்காணித்து, அது ஊருக்குள் வராமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
வனத்துறையினர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விவசாயப் பயிர்களைக் காக்கவும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிதர்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானையின் தொல்லை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் உள்ளனர். வனத்துறையின் இந்த துரித நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!