| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

சென்னையில் பரபரப்பு...! சாலையில் காவலரை அச்சுறுத்திய ஓட்டுநர்...! கைது...!

by Vignesh Perumal on | 2025-06-21 01:00 PM

Share:


சென்னையில் பரபரப்பு...! சாலையில் காவலரை அச்சுறுத்திய ஓட்டுநர்...! கைது...!

சென்னை மெரினா கடற்கரை சாலையில் காவலர் மீது மோதும் வகையில் அதிவேகமாக கார் ஓட்டி அச்சுறுத்திய வழக்கில், மயிலாப்பூரைச் சேர்ந்த அபிஷேக் (25) என்பவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அபிஷேக், அவரது மனைவி நந்தினி மற்றும் மற்றொரு நண்பர் ஆகிய மூவரும் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் ஒன்று அவரை நோக்கி வந்ததாகவும், மோதும் தோரணையில் மிக அருகில் வந்து திடீரென நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் செயல் காவலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியதோடு, விபத்தை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமாக கார் ஓட்டப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வாகனப் பதிவு எண்ணைக் கொண்டு காரின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில், கார் மயிலாப்பூரைச் சேர்ந்த அபிஷேக் என்பவருக்குச் சொந்தமானது என்பதும், அவரே காரை ஓட்டியுள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அபிஷேக் மற்றும் அவரது மனைவி நந்தினி ஆகிய இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்மீது 

வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். காரை ஓட்டிய அபிஷேக், அவரது மனைவி நந்தினி மற்றும் அவர்களுடன் காரில் பயணித்த மற்றொரு நண்பர் ஆகிய மூவரும் ஐ.டி. ஊழியர்கள் என போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மெரினா கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதிவேகமாக மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.



நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment