by Vignesh Perumal on | 2025-06-19 10:55 AM
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன் 20, 2025) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
33/11 KV செந்துறை துணை மின் நிலையத்தில் மின் சாதனங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கீழ்க்கண்ட கிராமங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செந்துறை, மதவனாயக்கென்பட்டி, பிள்ளையார்நத்தம், கோட்டைப்பட்டி, கோசுகுறிச்சி, குடகிபட்டி, மங்களபட்டி, மணக்காட்டூர், களத்துபட்டி, மாமரத்துபட்டி, கருத்தணாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் பராமரிப்பு பணிகளால் ஏற்படும் சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ளுமாறும், மின்வாரியத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!