| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

ADGP ஜெயராம் சஸ்பெண்ட் எதற்காக? உச்ச நீதிமன்றம் கேள்வி :

by Satheesh on | 2025-06-18 02:27 PM

Share:


ADGP ஜெயராம் சஸ்பெண்ட் எதற்காக?  உச்ச நீதிமன்றம் கேள்வி :

ADGP ஜெயராம்  சஸ்பெண்ட் எதற்காக ? - உச்சநீதிமன்றம் கேள்வி சிறுவன் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். ஜெயராமை கைது செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் கருத்து. சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து தமிழ்நாடு அரசின் ஆலோசனையை பெற்று நாளை பதிலளிக்க உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP) ஜெயராம் கைது செய்யப்படவில்லை என்றும், கடத்தல் வழக்கு விசாரணையில் இணைந்துள்ளார் என்றும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஜெயராம் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூத்த ஐபிஎஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், அவரை இடைநீக்கம் செய்ய மாநிலத்தின் முடிவைக் கேள்வி எழுப்பியது, உரிய நடைமுறையின் அவசியத்தை வலியுறுத்தியது. 

செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment