by Vignesh Perumal on | 2025-06-16 09:53 AM
தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ள ஜூனியர் பி.ஏ. காசிநாதன் என்ற தனி நபரின் தூண்டுதலின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை புதுக்கோட்டை மாவட்டம் புதுநிலைப்பட்டியில் உள்ள கண்ணுடைய அய்யனார் கோயிலை அபகரிக்க முயற்சிப்பதாகவும், இது தமிழகத்தில் அவுரங்கசீப் ஆட்சியை நினைவூட்டும் இந்து விரோத செயல் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா ஆவேசமாக குற்றம் சாட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம், புதுநிலைப்பட்டியில் உள்ள கண்ணுடைய அய்யனார் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்த பின்னர், கிராம மக்கள் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படுகிறதா என்பது குறித்து கிராம மக்களிடம் எச். ராஜா விளக்கங்களைக் கேட்டறிந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "அருள்மிகு கண்ணுடைய அய்யனார் கோயில் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது எப்போது?" என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "இவ்வலுவலகத்தில் தகவல் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு, எங்களுடைய அலுவலகப் பதிவுகளில் இல்லை என்று பதில் வந்துள்ளது. அப்படியென்றால், இதுவரை இந்தக் கோயில் அறநிலையத்துறையின் கீழ் இல்லை. ஆனால், இப்போது அறநிலையத்துறை நிர்வாகம் நாடகம் போடுகிறது.
இந்த நாடகத்திற்குக் காரணம் என்னவென்றால், தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் ஜூனியர் பி.ஏ.வாக உள்ள இந்த ஊரைச் சேர்ந்த காசிநாதன் என்ற தனி நபரின் தூண்டுதலின் பெயரால் தான் இந்த கிராமத்து அய்யனார் கோயிலை அறநிலையத்துறை அபகரிக்க முயற்சிக்கிறது. "அறநிலையத்துறை ஒரு கோயிலில் நுழைந்தால் ஆமை புகுந்த மாதிரி தான்" என்று நான் தொடர்ந்து போராடி வருகிறேன். 2018-ல் "இந்து டெம்பிள் ரிப்ளை மொமென்ட்" என்ற ஒன்றை ஆரம்பித்து பல விஷயங்கள் தொடர்பாகப் போராடிக் கொண்டிருக்கிறேன். ஒரு கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்துவது ஒரு துர்பழக்கம்.
ஒரு கோயிலை அரசாங்கம் எடுத்துக் கொண்டால், குறைந்தது முன்பு இருந்த நிலையிலாவது அந்தக் கோயிலைப் பராமரிக்க வேண்டும். ஆனால், அதுபோல இதுவரை நடந்திருக்கிறதா? இந்து சமய அறநிலையத்துறையைப் பார்த்து நான் கேட்கிறேன், ஒரு கோயிலை நீங்கள் கையகப்படுத்தி இருந்தால் குறைந்தபட்சம் அதே நிலையில் அந்தக் கோயிலைப் பராமரிக்க வேண்டும் அல்லவா? நீங்களே கிட்டத்தட்ட 1,800 கோயில்களைப் பராமரிப்பு இல்லாமல் கைவிட்டுவிட்டீர்கள் என்று நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளீர்கள். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ஒரு சர்ச்சையோ, பள்ளிவாசலையோ கையகப்படுத்தி அழியவிடுவீர்களா? அப்படி என்றால் அன்றிலிருந்து இன்றுவரை அறநிலையத்துறையில் வேலை செய்து வந்த அதிகாரிகள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யுங்கள். 1,900 கோயில்களைப் பராமரிப்பு செய்யுங்கள். என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? இந்து விரோத தீய சக்திகள் இங்கே ஒரு நபரின் (காசிநாதன்) தூண்டுதலால் ஊர் மக்கள் அனைவருக்கும் எதிராகச் செயல்படுகின்றன. முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்தால் அவர் என்ன பெரிய ஆளா? அவருக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் அனைவரும் அடிபணிவார்களா?
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவல் என்னிடம் இருக்கிறது. மார்ச் மாதம் வரை இந்தக் கோயில் அறநிலையத்துறையின் கீழ் இல்லை என்று தகவல் கொடுத்துள்ளீர்கள். அப்படி இருக்கும்போது இப்போது எப்படி நீங்கள் நுழையலாம்? இது எவ்வளவு பெரிய இந்து விரோத, தீய சர்க்கார் என்று சொன்னால், முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள். எவ்வளவு பெரிய மோசடிப் பேர்வழிகள். இந்து விரோதிகள். அவுரங்கசீப் ஆட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது. ஏன் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது? அதுபோல இந்த கோயிலையும் அபகரிக்க திட்டமிடுகிறார்கள். இது தவறு. உங்களுக்கு என்ன அதிகாரம் வந்தது? ஒரு சர்ச்சையை கையகப்படுத்துங்கள். ஒரு பள்ளிவாசலை கையகப்படுத்துங்கள். இந்தக் கோயிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஊர் மக்கள் நடத்தியுள்ளார்கள். நீங்களா செய்தீர்கள்? அறநிலையத்துறை செய்ததா?
இப்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சு ரொம்ப ஓவராகிவிட்டது. பைத்தியம் ஆகிவிட்டார். என்னை ஏழரை நாட்டு சனி என்கிறார். ஆமாம் என்கிறேன். சனிக்கு என்ன தெரியுமோ, குணம், வரவு செலவு கணக்குகளைச் சரியாகப் பார்த்து பாவ புண்ணிய கணக்குகளைப் பார்த்து சரியாகத் தீர்ப்பு கொடுப்பதுதான் சனி. 2026 மே மாதம் இந்த அயோக்கிய துறை அறநிலையத்துறைக்கு இருக்கிறது. தயவுசெய்து இந்தக் கோயில் விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடாதீர்கள். எந்தவிதத்திலும் நீங்கள் தலையிடுவதற்கு உரிமை இல்லை. முதலமைச்சர் அலுவலகத்தில் வேலை செய்யும் காசிநாதன் சொன்னார் என்று சொல்லி உள்ளே வந்து நுழைவீர்களா? இது நாள் வரை யார் பார்த்தது? ஊர் மக்கள் அனைவரும் இருக்கிறார்கள். நான் தனியாக இருக்கவில்லை. ஆகவே, இந்த அறநிலையத்துறை இந்துக்களைச் சுரண்டுவதற்கும், துன்பப்படுத்துவதற்கும், ஒரு கோயில் போனால் என்ன ஆகும் என்பதற்குத்தான். ஏன் போகக்கூடாது என்கிறேன்.
திருவண்ணாமலை சென்று இருந்தேன். உள்ளே நுழையும்போதே ஒரு பக்கமாக வாருங்கள் என்று சொல்லி அனுமதிக்கும் நுழைவு கட்டணம் ₹50 பெற்றுக் கொண்டார். அதன் பிறகு சாமி பார்ப்பதற்கு என்ன கட்டணம்? தரிசனக் கட்டணம், அர்ச்சனை செய்வதற்கு அர்ச்சனை சீட்டு, அபிஷேகம் செய்வதற்கு ₹2,500. ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு செல்லும் கிறிஸ்தவர்கள் பணம் கட்டுகின்றார்களா? இந்த அரசாங்கத்தின் தீய எண்ணம் என்ன தெரியுமா? இந்த அவுரங்கசீப் பிரசங்கத்தின் எண்ணம் இந்துக்களை மத நம்பிக்கையை விட்டு அவர்களை ஓட ஓடிப் போக வைக்க வேண்டும். இந்துக்கள் கோயிலுக்கு வரக்கூடாது. அதைத் தடுக்க வேண்டும். அதற்காக அவர்களுக்குப் போடுகின்ற ஜிசியா வரி இது. இத்தனை கட்டணங்களையும் வாங்கி அறநிலையத்துறை அதிகாரிகள் கொள்ளையடிப்பதற்காக ஒரு துறையை நிர்வகிப்பதற்கு துப்பு கெட்ட, இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத கூட்டம்.
முருகன் மாநாடு மதுரையில் நடக்கும்போது "முத்தமிழ் கடவுள் முருகன் மாநாடு" என்று இந்து மதத்தை மலேரியா, டெங்கு போல அழிப்பேன் என்று சொன்ன இந்து விரோதி துரோகி உதயநிதி ஸ்டாலினை அழைத்து வந்து நிறைவுரையாற்ற சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் அங்கு வந்து என்ன சொன்னார்? "இந்து ஆன்மீக மாநாடு இல்லை" என்று சொன்னார். பிறகு எதற்கு கோயில் பணத்தில் நடத்துகின்றீர்கள்? எவ்வளவு தூரம் இந்துக்களைக் கொடுமைப்படுத்துவது? இந்துக்களின் சொத்துக்களைக் கொள்ளை அடிப்பது? கோயிலின் பணத்தைத் திருடுவது? "முத்தமிழ் கடவுள் முருகன் மாநாடு" என்று தானே நடத்துகின்றீர்கள். ஆனால், அதற்கு வந்த இந்து விரோதி உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் யார்? அவர் சமீபத்தில் கூட கூறினார், "நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்." நான் இந்து என்பதில் பெருமை கொள்கிறேன். உதயநிதி ஸ்டாலின் அவர் சொன்னார், "நான் கிறிஸ்தவன் தான். காதலித்து மணந்த மனைவி கிறிஸ்தவர்" என்று சொன்னார். சொன்னவுடன் இந்த இந்து விரோதி சேகர்பாபு அல்லேலூயா என்று சொன்னார். எவ்வளவு தீய சக்திகள், கிருமிகள் இவர்கள்? மலேரியா, டெங்கு, கொரோனா போல புதிய வெர்ஷன் கொரோனாவை இந்த அறநிலையத்துறை தான்.
இந்தக் கோயிலில் நீங்கள் வந்து தலையிடுவதற்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. இந்துக்கள் அனைவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க நேரிடும் என்று சொன்னால், அறநிலையத்துறை பட்டியலில் இந்தக் கோயில் இல்லை. இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறை நுழைவது தீய நோக்கத்தோடு. என்ன நோக்கம்? வந்து அந்த 1,900 கோயில்களைப் பராமரிக்காமல் விட்டது போல் இந்தக் அய்யனார் கோயிலையும் அழிக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டு சதி செய்கிறது. அதனால் உங்கள் பட்டியலில் இந்தக் கோயிலைக் கையகப்படுத்துகின்றீர்கள். கேட்டால் அந்த அம்மா சொல்கிறார்கள், "எங்களுக்குக் கணக்கைக் காட்டிவிட்டு கோயிலை நிர்வகித்துக் கொள்ளுங்கள்." நீங்கள் யார் கணக்குக் கேட்க? கோயில் கிராமத்தில் அய்யனார் கோயில் இருந்தால் நீ மட்டும் நாட்டாமையா? தைரியம் இருந்தால் இந்த அறநிலையத்துறை ஒரு சர்ச்சையைக் கையகப்படுத்தி இதுபோல பேசு. 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும். அப்போது அறநிலையத்துறை எடுக்கப்படும்," என்றார் எச். ராஜா.
செய்தி- பழனியப்பன் புதுக்கோட்டை.