by Vignesh Perumal on | 2025-05-10 08:27 PM
இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுத்து வெற்றிகளை குவித்த நிலையில், பாகிஸ்தான் சரணடைந்த பின் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசு முன்வந்துள்ளதற்கு தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி கருத்து தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால், எந்த வெளிநாட்டு மத்தியஸ்தத்தையும் ஏற்காமல் பாகிஸ்தானை முழுமையாக அழித்து இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது போரைத் தொடங்கி பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக முன்னேறியது. பாகிஸ்தான் பலமுறை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தபோதும், இந்தியா அதனைப் பொருட்படுத்தாமல் தாக்குதலைத் தொடர்ந்தது. தொடர் தாக்குதல்களால் பாகிஸ்தான் பல இடங்களில் தோல்வியடைந்து, இறுதியில் அமெரிக்காவின் முன்னிலையில் சரணடைந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்காக கெஞ்சியது.
தற்போதைய சூழலில், இந்திய அரசு அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை ஏற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது. எனினும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் மீண்டும் இந்தியா மீது பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டால், எந்த வெளிநாட்டு அழைப்பையும் ஏற்காது, நேரடியாக பாகிஸ்தான் மீது போரைத் தொடுக்க வேண்டும். மேலும், பாகிஸ்தானை முற்றிலும் அழித்து, இந்தியாவுடன் இணைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகிறது.
இந்த நோக்கத்திற்காக, இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி ஒரு உறுதியான வேண்டுகோளை முன்வைக்கிறது.
முக்கிய கோரிக்கைகள்: 'இந்தியாவின் தொடர் தாக்குதல்களால் பாகிஸ்தான் பல இடங்களில் அதிர்ச்சி அடைந்தது. பாகிஸ்தான் அமெரிக்காவின் மூலம் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. எதிர்காலத்தில் இந்தியா எந்த வெளிநாட்டு அழைப்புகளையும் ஏற்கக்கூடாது. பாகிஸ்தான் மீது போரைத் தொடர்ந்து நடத்தி, முழு வெற்றி பெறும் வரை ஓயக்கூடாது. பாகிஸ்தானை இந்தியாவுடன் இணைக்கும் தீர்மானத்தில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு, தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி, பாரத பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.