by Vignesh Perumal on | 2025-11-29 01:40 PM
தமிழகத்தில் நிலவி வரும் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, இன்று (நவம்பர் 29, 2025) செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று அதிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று 20 செ.மீட்டருக்கு அதிகமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களும், மாவட்ட நிர்வாகங்களும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், பின்வரும் மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (நவம்பர் 30, 2025) மேலும் சில மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளைக்கான (ஞாயிற்றுக்கிழமை) 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உள்ளன.
பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், மழை பாதிப்புத் தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் அவசர உதவி எண்களைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு