by Vignesh Perumal on | 2025-10-30 02:23 PM
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் இன்று (அக்டோபர் 30, 2025) முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வின்போது, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்தபோது, பூசாரிகள் தடுத்ததால் சர்ச்சை ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது.
முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் வருகை தந்தார். அப்போது, நினைவிடத்திற்குள் மரியாதை செலுத்தும் முறையில் அங்கிருந்த பூசாரிகளுக்கும், ஸ்ரீதர் வாண்டையாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தன்னைத் தடுக்க முயன்ற பூசாரிகளுடன் ஸ்ரீதர் வாண்டையார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஸ்ரீதர் வாண்டையார் ஆத்திரமடைந்து, பூசாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்ததால் நிலைமை மேலும் மோசமடைந்தது. இதனால், இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் காரணமாகக் கோபமடைந்த ஸ்ரீதர் வாண்டையார், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தேவர் நினைவிடத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குருபூஜை நாளில் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரே தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால், பசும்பொன் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுச் சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் குழு.......
முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க துணை இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும். விவசாயிகள் சங்கம்..!!! கோரிக்கை
ஸ்ரீகாகுளம் கோயில் கூட்ட நெரிசல்...! 9 பேர் பலி...! பிரதமர் மோடி இரங்கல்...!
கொடூர சம்பவம்....! கூட்ட நெரிசல்...! ஏகாதசி தரிசனத்தில் 9 பேர் பலி...!
V O C நினைவு நாள் பேச்சு போட்டி
உங்களுடன் முதல்வர் ஸ்டாலின் திட்ட மூலம் பட்டா வழங்கல்..!!!