by admin on | 2025-10-25 12:37 PM
கும்பகோணம் அருகே வலையப்பேட்டை ஊராட்சியில் மழைநீர் சூழ்ந்து பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்ட அதிமுக நிர்வாகிகள்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வலையப்பேட்டை ஊராட்சியில் வி,கே,எஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக 145 வீடுகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்தில் இருந்து வருகின்றனர், அதனை அறிந்த அதிமுக கும்பகோணம் ஒன்றிய செயலாளர் சோழபுரம் கா,அறிவழகன், மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பு, அறிவழகன், தலைமையிலான அதிமுக கழக நிர்வாகிகள் நேரில் சென்று
பார்வையிட்டு மக்கள் படும் துயரத்தை கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தனர், மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி விஜயலட்சுமி முன்னிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய உறுதியளித்தனர், (உடன்) கழக நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி,கே, ராஜா, முருகானந்தன், கொத்தங்குடி பாஸ்கரன், என பலர் இருந்தனர்,
நிருபர் அ, மகேஷ்
அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு....!!!!
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???