| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

கோரவிபத்து...! ஆம்னி பேருந்தில் பயங்கர தீவிபத்து..! 15 பேர் பலி..! 20க்கும் மேற்பட்டோர் காயம்..!

by Vignesh Perumal on | 2025-10-24 12:20 PM

Share:


கோரவிபத்து...! ஆம்னி பேருந்தில் பயங்கர தீவிபத்து..! 15 பேர் பலி..! 20க்கும் மேற்பட்டோர் காயம்..!

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.

ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, கர்னூல் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டதால், பேருந்தில் உடனடியாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டபோது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர்.

திடீரெனப் பற்றிய தீ மளமளவெனப் பேருந்து முழுவதும் பரவியதால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, பேருந்தின் அவசர கால கதவு வழியாகக் குதித்துத் தப்பியுள்ளனர்.

இருப்பினும், தீயில் சிக்கி சுமார் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தீக்காயம் அடைந்தவர்கள் மற்றும் காயம்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. மேலும், விபத்துக்கான சரியான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பேரழிவு தரும் தீவிபத்து குறித்து அறிந்து ஆந்திர மாநில முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆழ்ந்த அதிர்ச்சி மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "பேரழிவு தரும் பேருந்து தீவிபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அரசு அதிகாரிகள் வழங்குவார்கள் என்று உறுதியளிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் ஆந்திர மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.





நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment