| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

சட்டவிரோத மது விற்பனை...! 3 காவலர்கள் சஸ்பெண்ட்..!

by Vignesh Perumal on | 2025-07-24 10:28 AM

Share:


சட்டவிரோத மது விற்பனை...! 3 காவலர்கள் சஸ்பெண்ட்..!

திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் 3 காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) கருண் கரட் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை காவல் துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட பின்வரும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது, நன்னிலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சரவணன்.

தனிப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் ராஜேஷ். மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் செல்வேந்திரன் ஆகியோர் சஸ்பென்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கவும், அதில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சட்டவிரோத மது விற்பனையாளர்களுடன் சில காவலர்கள் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு உடந்தையாகச் செயல்படுவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. கருண் கரட் உத்தரவின் பேரில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், இந்த மூன்று காவலர்கள் சட்டவிரோத மது விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்தது உறுதியானதையடுத்து, அவர்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. கருண் கரட் உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறையில் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் காவலர்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment