by Vignesh Perumal on | 2025-07-23 10:05 PM
கேரள மாநிலம் ஆலப்புழாவில் நகைக்கடை உரிமையாளர் ஒருவரிடம் ரூ.3.24 கோடி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், திருவாரூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஸ்ரீராம் என்பவரைக் கேரள போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தமிழகம் மற்றும் கேரளா இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஒரு நகைக்கடை உரிமையாளரிடமிருந்து ரூ.3.24 கோடி பணம் வழிப்பறி செய்யப்பட்டதாகக் கேரள காவல் துறையினருக்குப் புகார் வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, திருவாரூரில் உள்ள பாஜக நிர்வாகி ஸ்ரீராமுக்கு இந்த வழிப்பறி வழக்கில் தொடர்பு இருக்கலாம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தத் தகவல்களின் அடிப்படையில், கேரள போலீசார் திருவாரூருக்கு வந்து ஸ்ரீராமை இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், திருக்குமார் உள்ளிட்ட 7 பேரைக் கேரள போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது பாஜக நிர்வாகி ஸ்ரீராம் கைது செய்யப்பட்டுள்ளது, இந்த வழிப்பறி வழக்கில் மேலும் பல முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கைது செய்யப்பட்ட ஸ்ரீராமிடம், இந்த வழிப்பறிச் சம்பவத்தில் அவரது பங்கு என்ன, வேறு யார் யாருக்கு இதில் தொடர்பு உள்ளது, வழிப்பறி செய்யப்பட்ட பணம் எங்கு மறைக்கப்பட்டுள்ளது என்பது போன்ற பல்வேறு கோணங்களில் கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!