by Vignesh Perumal on | 2025-07-21 08:26 PM
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர் காரணமாகப் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சௌந்தரபாண்டிய நாடார் இளைஞர் பேரவையின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டரில், கல்வி கண் திறந்த காமராஜர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவிற்கு வன்மையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டிவீரன்பட்டி முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டரில், சௌந்தரபாண்டிய நாடார் இளைஞர் பேரவை தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் பின்வருமாறு: "வன்மையாக கண்டிக்கிறோம்.. கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் கைக்கூலி திருச்சி சிவாவே வன்மையாக கண்டிக்கிறோம்" இவ்வாறு அந்தப் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, காமராஜர் குறித்து என்ன பேசினார் என்பது குறித்தும், இந்த போஸ்டரால் அப்பகுதியில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் போலீசார் மற்றும் அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இச்சம்பவம் அரசியல் ரீதியாகப் புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !
புலிகள் காப்பகம் - மீட்டெடுக்கும் பணி தீவிரம் !
முதலையை பிடிக்க நடவடிக்கை - பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல் !