by Vignesh Perumal on | 2025-07-21 08:09 PM
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கூட்டுறவு கலைக் கல்லூரியின் 2025-2026-ஆம் கல்வியாண்டில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான துவக்க விழாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி இன்று தொடங்கி வைத்தார்.
துவக்க விழாவில் பேசிய அமைச்சர் இ.பெரியசாமி, தமிழகம் முழுவதும் கல்வி மேம்பாட்டிற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். அவர் தனது உரையில், "தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநிலம் முழுவதும் தேவைக்கேற்ப புதிய கல்லூரிகளைத் தொடங்கி வருகிறார்" என்று குறிப்பிட்டார்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அரசு மேற்கொண்டுள்ள சிறப்பு முயற்சிகளை அவர் விளக்கினார். ஆத்தூர் தொகுதியில் 2 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரத்தில் 2 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நத்தத்தில் ஒரு புதிய கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. பழனியில் ஒரு சித்தா கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூரிகள் அனைத்தும் திண்டுக்கல் மாவட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, அவர்களின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்றும் அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
இந்த துவக்க விழாவில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், புதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!