by Vignesh Perumal on | 2025-07-20 11:17 AM
இமாச்சலப் பிரதேசத்தின் ஷில்லை கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் மற்றும் கபில் என்ற அண்ணன் தம்பதியினர், சுனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளனர். ஹட்டி (Hattee Community) சமூகத்தில் நிலவும் ஒரு வினோத கலாச்சாரத்தின்படி, ஒரு பெண் இரு ஆண்களை, குறிப்பாக அண்ணன் தம்பிகளை மணப்பது வழக்கமாக உள்ளது. இந்தத் திருமணம் அனைவரின் விருப்பத்தின்படியே நடைபெற்றதாகவும், தங்கள் கலாச்சாரத்தைப் பற்றிப் பெருமைப்படுவதாகவும் புதுமணத் தம்பதியினர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் வாழும் ஹட்டி சமூக மக்கள் தனித்துவமான பழக்கவழக்கங்களையும் கலாச்சாரங்களையும் கொண்டுள்ளனர். அதில் ஒன்றுதான் பாலிண்ட்ரி (Polyandry) எனப்படும் ஒரு பெண் பல ஆண்களை மணக்கும் வழக்கம். பொதுவாக, இது அண்ணன் தம்பிகளுக்கிடையே ஒரு பெண்ணைப் பகிரும் முறையாகும். இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக ஹட்டி சமூகத்தில் இருந்து வருகிறது.
இத்தகைய திருமணங்கள் குடும்பச் சொத்துக்களைப் பிரிவதைத் தடுக்கவும், வளங்களைச் சிறப்பாக நிர்வகிக்கவும் உதவுகிறது என்று நம்பப்படுகிறது. மேலும், ஒரு குடும்பத்தில் பிறந்த அனைத்து சகோதரர்களுக்கும் ஒரு மனைவி கிடைப்பதை இது உறுதி செய்கிறது.
ஷில்லை கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் மற்றும் அவரது தம்பி கபில் ஆகியோர் சுனிதா என்ற பெண்ணை தங்கள் சமூக வழக்கப்படி மணந்துள்ளனர். இந்தத் திருமணம் பரஸ்பர சம்மதத்துடன் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. புதுமணத் தம்பதியினர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தங்கள் சமூகத்தின் இந்தத் தனித்துவமான கலாச்சாரத்தைப் பற்றிப் பெருமைப்படுவதாகவும், இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் வெளி உலகத்தினருக்கு இது வினோதமாகத் தோன்றினாலும், ஹட்டி சமூகத்தினரைப் பொறுத்தவரை இது அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கம் மற்றும் ஒரு வழிமுறையாகும்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!