by Vignesh Perumal on | 2025-07-18 12:32 PM
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியில் யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த தந்தத்தைப் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாண்டிக்குடி மலைப்பகுதியைச் சேர்ந்த சிலர் யானை தந்தத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, வனத்துறை தனிப்படையினர் மாறுவேடத்தில், வியாபாரி போலப் பேசி, தந்தத்தை விற்க முயன்ற கும்பலை அணுகினர்.
வனத்துறையினரின் திட்டப்படி, தந்தத்தை விற்பனை செய்ய வந்த மூன்று பேரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்கள், தாண்டிக்குடி மங்களம்கொம்பையைச் சேர்ந்த சுருளிவேல் (38) பண்ணைக்காடு ஆலடிப்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (44) தாண்டிக்குடி பட்லங்காட்டைச் சேர்ந்த பாஸ்கரன் (23) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து யானைத் தந்தத்தைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த யானைத் தந்தம் எங்கிருந்து பெறப்பட்டது, இதன் பின்னணியில் உள்ள கும்பல் யார், வேறு ஏதேனும் சட்டவிரோத வனவிலங்கு கடத்தல் சம்பவங்களில் இவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
யானைத் தந்தம் போன்ற வனவிலங்குப் பொருட்கள் விற்பனை வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும். இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!
கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம் - இடையூறாக இருந்த கணவன் கொலை ! 3 பேரை தூக்கிய போலீஸ் !!