by Vignesh Perumal on | 2025-07-12 08:15 PM
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், சென்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பைனான்சியர் செல்வராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு, திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பைனான்சியர் செல்வராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர்கள், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பெற்றோரின் புகாரின் பேரில், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி, சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் கொண்ட குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், பைனான்சியர் செல்வராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் (Protection of Children from Sexual Offences Act) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான ஆலோசனைகளும், பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றன. பாலியல் தொல்லைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!