by Vignesh Perumal on | 2025-07-11 01:17 PM
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தெருநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி எம்.பி.ஏ. பட்டதாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள குப்பட்டி ஊராட்சி, தின்னுரை பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் பிரியன் (வயது 23). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், சமீபத்தில் தனது பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு தெருநாயால் கடிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் ஏற்பட்ட காயம் சிறியதாக இருந்ததால், எட்வின் பிரியன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் எந்தவித மருத்துவ சிகிச்சையும் பெறாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்தது. உரிய நேரத்தில் சிகிச்சை பெறாததால், ரேபிஸ் நோயின் தாக்கம் அதிகரித்து, அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தின்னுர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்துவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!