by Vignesh Perumal on | 2025-07-11 12:41 PM
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
வரும் ஜூலை 26 அன்று, பிரதமர் மோடி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவரது தமிழக பயணத்தில், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அவர் வருகை தர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்பது அவரது பயணத்தின் முக்கிய அம்சமாக இருக்கும். இந்த ஆன்மீக நிகழ்வு மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் மகா அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் கட்சிகளின் தேர்தல் பணிகளைத் தொடங்கி, மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் இயக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை, கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு, மாநிலத்தின் அரசியல் முக்கியத்துவத்தையும், பாஜகவின் எதிர்கால வியூகங்களையும் கோடிட்டுக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பிரதமரின் இந்த வருகை, தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!